மௌனப் பழம்
எம்.எஸ்.-ஐ நினைக்கிறபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் ரவீந்திரநாத் தாகூர்தான். அதற்கு இரண்டு நியாயப்பாடுகள் உள்ளன. முதலாவது, தாகூரின் ‘கீதாஞ்சலி’யில் வருகிற ஒரு வரி (Story Birds, 155)
‘Silence will carry your voice like the nest that holds the sleeping birds.’
“மௌனம் உம் குரலைக் காவிச் செல்லும்
தூங்கும் பறவைகளைத் தாங்கும் கூடுகளைப்போல”
எம்.எஸ்.-ஐத் சந்தித்த எல்லாப் பொழுதுகளிலும் அவர் என்னுடன் பேசிய வார்த்தைகளை எண்ணிவிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அபூர்வமாகவும் அற்புதமாகவும் எழுதப்படும் ஹைக்கூ (Haiku) போன்றவை அவை. (தமிழில் எழுதப்படும் ஹைக்கூக்களைச் சொல்லவில்லை.)
எம்.எஸ். அவர்களை முதலில் சந்தித்தபோது அவர் சு.ரா. வீட்டு வெளித் திண்ணையருகே இருந்த கதிரையொன்றில் ‘சும்மா’ அமர்ந்திருந்ததாக நினைவு. ஒரு முனையில