ஆய்வில் புதிய களங்கள்
செ.மு. நஸீமா பர்வீன்
‘தற்கால இஸ்லாமியத் தமிழ்ப் படைப்புகளில் பெண் உடல் அரசியலும் படைப்பாளி அரசியலும்’ என்ற பொருண்மையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வை மேற் கொண்டிருக்கிறார் செ.மு. நஸீமா பர்வீன். இஸ்லாமிய வாழ்வியலை உன்னித்துப் பார்ப்பவர்களுக்கு பட்ட ஆய்வின் தலைப்பு ஆச்சரியமானதாகத் தோன்றும். இவ்வாறான தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள ஒரு முஸ்லிம் பெண் முன்வந்திருப்பதே அதன் காரணம்.
தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய வாழ்வின் இலக்கியப் பதிவுகள் வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. கதை, கவிதை, நாவல்கள் பெருகிய அளவுக்கு அவ்விலக்கியங்களைக் குறித்த ஆய்வுகள் இல்லவே இல்லை. அவ்வாறு செய்யப்படுவனவும் இச்சமூகத்துக்கு வெளியிலிருந்து மேற்கொள்ளப்படுவனவாக உள்ளன. நஸீமா பர்வீனின் வருகையும் ஆய்வும் முக்கியமானதாகக் கருதப்படுவது இக்காரணத்தினால்தான். சொந்தச் சமூகத்திலிருந்து மட்டுமல்ல, நச