செவிலியர் போராட்டம் ஏன் முக்கியம்?
நவம்பர் 26, 27, 28 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற செவிலியர் போராட்டம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப்பின் பெரும் மக்கள் திரளைப் பார்த்த போராட்டம். நிரந்தரப் பணியாளராய் இருக்கும் செவிலியர் தமக்கென சங்கம் அமைத்து தம் கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். 2015ஆம் ஆண்டில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு வைத்து 11000 செவிலியரைப் பணி நியமனம் செய்தது அரசு. அவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களின் கல்வித் தகுதியைப் பார்த்தால் செவிலியருக்கான பட்டப் படிப்பில் இளங்கலை, முதுகலை முனைவர் பட்டம் வாங்கியவர்கூட உண்டு. அந்த ஒப்பந்தப் பணியாளர்கள்தான் இந்தப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
செவிலியரின் மாத வருமானம் ரூபாய் 7700. அவர்கள் பணி நிரந்தரமாகும் என்ற நம்பிக்கையில் தாம் பார்த்த வேலைகளை விட்டு ஒப்பந்தப்பணியாளராகச் சேர்ந்திருக்கிறார்கள். அதில் மிக