புதிதெனச் சுடர்விடும் உயிர்
கவிஞர் ஒருவரின் கவிதைத் தொகுப்புக்கான விமர்சன அல்லது பாராட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். மொத்தம் ஆறு நூல்களுக்கான நலம் விதந்தோதும் உரைகள் வாசிக்கப்பட்டன.எல்லோரும் மறக்காமல் அந்தந்தக் கவிதை நூல்களிலிருந்து பிடித்த சில கவிதைகளையும் வாசித்தார்கள். விழாவின் முடிவில் அரங்கிலிருந்த வேதசகாயகுமார் “உங்களில் யாருக்குமே ஒரு கவிதையை எப்படி வாசிப்பதென்று தெரியவில்லை” என்றார். “நீங்கள் உட்பட கவிதையை அரங்கில் வாசிப்பது என்பது ஒரு கலை. அதை சுந்தர ராமசாமி மிக நுட்பமாக அழகுடன் செய்வார்” என்றார்.
உண்மைதான். ஒப்பிட, இடதுசாரிகள் ஓரளவு அதை நன்றாகச் செய்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான பயிற்சியும் இருக்கிறது. தேவையும் இருக்கிறது. அதே சமயம் கவிதை வாசிப்பு என்பது விவிலியத்தில் சொல்வதுபோல அந்தரங்கத்தில் பிரவேசித்துச் செய்யக்கூடிய காரியம் என்கிற கருத்தும் தமிழுக்கு வெகு முன்பே வந்துவிட்டது. இடதுசாரிகள் எ