தமிழ் சினிமாவின் மலையாள ரசிகர்
அதீதக் கற்பனை, பாட்டு, கூத்து,அதி மானுடம், பகுத்தறிவுக்கு ஒவ்வாத உரையாடல்கள் இவற்றையெல்லாம் மலையாளம் தவிர்த்த மற்ற சினிமாக்களில் பொறுமையுடன் பார்க்கவும் கைத்தட்டவும் தயாராக இருக்கும் மலையாளிப் பார்வையாளர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.இந்தப் பார்வையாளர்களை மூன்றாக வகைப்படுத்தலாம். ஒன்று, எந்த வணிக சினிமாவையும் பார்த்துக் கைத்தட்டும் கூட்டம். இரண்டு, செலக்டிவ் என்று தம்மைக் கருதிக்கொள்ளும் சராசரிப் பார்வையாளர்கள் ( மணிரத்னம் படங்களின் ரசிகர்கள்) மூன்று - கலைப்படப் பிரியர்கள் (இவர்கள் வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக கலை ரீதியான சினிமாக்களைப் பற்றிப் பேசுவார்கள்; மணிரத்னம் படங்களை இகழ்வார்கள்; ரஜினி, தல படங்களைப் பற்றி வாயடிப்பார்கள்.) இந்த மூன்று வகையான பார்வையாளர்களும் ஒன்றிணைந்து ஒரே வரிசையில் நிற்பது மலையாள சினிமாவை மதிப்பிடும்போது மட்டுமே. தமிழ் சினிமாவுக்கு அளிக்கும் சலுகைகளை இவர்கள