ஓநாய்களை ஓடவிரட்டும் தருணம்
பொதுவெளியிலும் தொழில் சார்ந்த இடங்களிலும் தனக்கு நேரும் உடல் ரீதியான பாலியல் சீண்டல்களையும் தொந்தரவுகளையும் அவமானங்களையும் ஒரு பெண் மனத்தினுள் புதைத்துவைத்துத்தான் இயங்கிவருகிறாள். பேருந்துப் பயணத்திலிருந்து கலை, கல்வி, இலக்கிய உலகம்வரை நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையும் ஓநாய்களைக் கடந்துதான் ஒரு பெண் வாழ வேண்டியிருக்கிறது. எண்பதுகளில் ஒருநாள் கலைப்படங்களின் இயக்குநராகப் புகழ்பெற்ற ஒருவர் இரவு விருந்துக்குக் கூப்பிட்டிருந்தார். புகழ்பெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தாமதமாக வந்தார்; வந்தவுடன் எல்லாரின் கவனமும் அவர்புறம் திரும்பியது. “தாமதத்துக்கு மன்னியுங்கள். இப்போதுதான் ஓர் இளம் பத்திரிகையாளரை அனுபவித்துவிட்டு வருகிறேன்,” என்றார், ஏதோ தண்ணீர் சாப்பிட்டுவிட்டு வந்தவர்போல. அவர் செய்தது பாலியல் சீண்டல் கூட இல்லை; அது அதிகாரப் பலத்துடன் செய்த பாலியல் வன்முறை. ஆனால் அவர் கூறியதற்