பழனிக்குமார்
கடந்த வருடம் பரவலான கவனம் பெற்றது ‘கக்கூஸ்’ ஆவணப்படம். திவ்ய பாரதி இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலமாக இருந்தது. மனித மலத்தை அள்ளும் தொழிலாளர்களின் பாடுகளைத் தயவுதாட்சண்யமற்ற வகையில் பார்வையாளர்களின் கண்முன்னே விரித்துக் காட்டின அந்தக் காட்சிகள். இதை ஒளிப்பதிவு செய்தவர் ம. பழனிக்குமார். இவரது புகைப்படங்களின் கண்காட்சி ‘நானும் ஒரு குழந்தை’ என்னும் தலைப்பில் சென்னை லலித் கலா அகாதெமியில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பாக நவம்பர் 9 முதல் 14 வரை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் ‘கக்கூஸ்’ ஆவணப்பட ஒளிப்பதிவின்போது எடுக்கப்பட்டவை. “இதுவரை எடுத்த எல்லாப் புகைப்படங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடும் புள்ளியாகக் குழந்தைகளோடு கழிந்த தருணங்களையே உணர்கிறேன்,” எனச் சொல்லும் பழனி, அந்தக் காட்சிகளைக் கர