மற்றொரு உலகம்
‘உங்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது,’ என்றார் சுந்தர ராமசாமி. “உங்கள் கட்டுரை குறித்து அபிப்பிராயம் சொல்வது, பாராட்டுவது, எழுத ஊக்குவிப்பது, உற்சாகப்படுத்துவது. எங்கள் இத்தனைவருட நட்பில் ஒரு வார்த்தைக்கூட அவர் என்னிடம் சொன்னதில்லை.” சுரா சொன்னதைச் சொன்னதுதான் தாமதம், தேகம் குலுங்க வாய்விட்டுச் சிரித்தார். மவுனமானார். “அவர் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும். விரும்பித் திரும்பத் திரும்பப் படிச்சிருக்கிறேன். எவ்வளவு அழகான வரிகள். கனகச்சிதமான வார்த்தைகள். அவருக்கு நிகர் அவர்தான்.” “இதை நீங்கள் சுராவிடம் சொல்லியிருக்கலாமே! எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்,” என்றேன். ஈசிச்சேரில் சாய்ந்த வண்ணம் மீண்டும் மவுனமானார். வலதுகையால் தன்திறந்த மார்பைத் தடவியவாறு ஈசிச்சேரின் கைப்பிடியில் இடதுகையை ஊன்றி ஒவ்வொருவிரலாக மடக்கி நீட்டியபடி ஆழ்ந்திருந்தார் எம்.எஸ்.