கடைசி வார்த்தை
நான் 50களில் எடுத்த படம் இது; அப்போது கிளித்திரீ கேமரா வைத்திருந்தேன்; ஒரு நிலவில் மாலையில் நல்ல வெளிச்சத்தில் எடுத்தது; இதைப் பின் அட்டையில் போடலாம்,” என்றார் எம்.எஸ். அவர் அப்போது என்னிடம் தந்தது விவேகானந்தா பாறையின் படம்; பாறை மொட்டையாக இருந்தது; திருவள்ளுவர் பாறையும் தெரிந்தது; கன்னியாகுமரி கடற்கரையில் நின்ற பெரிய நாட்டு உடைமரங்களின் பின்னணியிலும் சில படங்கள் எடுத்திருக்கிறார். இப்படியான அபூர்வமான படங்களைக் காட்டினார்.
கன்னியாகுமரி ஹரிகுமரி ஆர்ட்ஸ் நிறுவனத்தார் தமிழகக் கோவில்கள் பற்றி வெளியிட்ட குறும் நூல்களுக்குச் செய்தி சேகரிக்க தமிழகம் முழுக்கக் காரில் பயணம் செய்திருக்கிறார் எம்எஸ். இக்காலங்களில் டி.எ. கோபினார்ராவ் எழுதிய ‘சிற்பங்கள்’ பற்றிய நூலைப் படித்திருக்கிறார். சிற்பங்கள் பற்றி நுட்பமாகச் சுவராசியமான சில விஷயங்களைப் பேசக் கேட்டிருக்கிறேன். நான் இதைப்பற்றிச