முன்செல்லும் மனங்கள்
கடந்த பத்தாண்டுகளில் இளைஞர் கள் நாடகத்தில் பங்கேற்பது பரவலாகியிருக்கிறது. ஒரு பிரிவினர் திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் நாடகப் பயிற்சியை மேற்கொள்ள சென்னையில் இயங்கும் நாடகக்குழுக்கள், நடிப்புப் பள்ளிகளில் (குறுகியகாலப் பயிற்சிகள்) பயின்று நாடகத்தில் ஈடுபடுபவர்கள். மற்றொரு பிரிவினர் கல்லூரிகளில் படிக்கும் நாட்களில் நவீன நாடக அறிமுகம் பெற்று, நாடகக்குழுக்களில் பணிபுரிந்து தேசிய நாடகப்பள்ளி போன்ற இடங்களுக்குச் சென்று உயர்கல்வி கற்று நாடகத்தில் ஈடுபடுபவர்கள். இந்த இருபிரிவுகளில் ஆர்வமும் படைப்பாக்கத்திறனும் கொண்ட பல இளைஞர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். புதிய திசைகளும் படைப்புநெறிமுறைகளும் கொண்ட அவர்களில் என்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய முழுநேரமாக நாடகப் பணியை முன்னெடுக்கும் மனோபாவம் கொண்ட எனது மாணவர்கள் மூன்று பேரின் பின்புலங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.