பழைமைக்குப் புதுப் பொருள்
செல்லத்துரை சுதர்சன்
அண்மைக் காலங்களில் ஈழத்தில் வெளியாகியிருக்கும் பழைய இலக்கிய, ஆவண, வரலாற்று நூல்களுள் சிறப்பும் பதிப்புத் திறனும் ஆய்வுச் செழுமையும் நுண்மாண் நுழைபுலமும் மிக்க இரண்டு நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார் இளம் ஆய்வாளர் செல்லத்துரை சுதர்சன். மரபும் நவீனமும், புதுமையும் சோதனாபூர்வமாக இணையும் கவிஞர். பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர். பேராசிரியர் நுஃமானின் மாணவர். ஈழத்துத் தமிழ்ப் புலமை / புலமையாளர் மரபு, இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து ‘மறுமலர்ச்சி’ இயக்கம், அதன் முக்கியமான இலக்கிய வெளியீடான மறுமலர்ச்சி சஞ்சிகை, கவிதை, காலனித்துவமும் சமூக அமைப்பு மாற்றங்களும் என்பன அவரது கவனத்தை ஈர்த்திருக்கும் ஆய்வுப் பரப்புகளாக உள்ளன.
மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பை எழுத்தாளர் கோப்பாய் சிவத்துடன் இணைந்து பதிப்பித்துள்ளார் (2016). ஈழத்தின்