2017இன் தமிழ்த் தேவதை
பார்வையாளரை அதீத உணர்ச்சிவசப்படலுக்கு உள்ளாக்கி அழ வைப்பது இலகுவான வேலை. குறிப்பிட்ட வார்த்தையையோ காட்சியையோ அமைத்து அதைச் சாத்தியப்படுத்தி விட முடியும். இதற்கு மெனக்கெடல் என்று தனியாக எதுவும் தேவையில்லை; மனிதம், அன்பு, காதல், தாய்மை போன்ற நைந்துபோன க்ளிஷே வார்த்தைகள் போதுமானவை. இறுதியில் மனம் கனத்து உச்சிமுகந்து கண்ணீருடன் அப்படைப்பைக் கொண்டாடுவார் பார்வையாளர். அது எக்காலத்துக்குமான காவியம் என்றும் கொண்டாடப்படலாம்.
அது எக்காலத்துக்குமான காவியமாக மாறுமா? இந்த கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல முடியும்; அல்லது இதுவரையிலான செவ்வியல் ஆக்கங்கள் கண்ணீரை மட்டும் மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் பதில் சொல்லலாம். பார்வையாளரைக் கண்ணீர் மல்கக் கதறவிடுவதுதான் கலையின் நோக்கமா? இல்லையென்றால் சமூகத்தில் கலைக்கான வேலை என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வேறுவேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில