உயிர்ப்பலி கேட்கும் கல்வி
The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existences - Rabindranath Tagore.
பள்ளிப்பருவம் என்றாலே பச்சையம் பூத்த நினைவுகள் மனத்தில் பொங்கும் என்பதெல்லாம் சென்ற தலைமுறையின் வழக்காகி விட்டது. இப்போது பள்ளிப்பருவம் என்றாலே மதிப்பெண், சிறப்பு வகுப்புகள், தேர்வுகள், வீட்டு ஒப்படைப்புகள் என்று சின்னஞ்சிறு மூளையைப் படாத பாடுபடுத்தும் வதைப்பருவமாக மாறி இருக்கிறது. பல பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் இல்லை. இசை, தையல், கதைப்புத்தகங்கள், நூலகம் எல்லாம் கெட்ட வார்த்தைகளைப் போலப் பார்க்கப்படுகின்றன. இருபத்து நான்கு மணி நேரமும் பாடப்புத்தகங்களைப் படிப்பது, மனனம் செய்வது, மதிப்பெண்ணை மட்டுமே கவனம் கொள்வது என்பதே ‘நல்ல’ மாணவர்களின் இலக்கணமாகியிருக்கிறது. மதிப்பெண் குறைவாக எடுக்கின்ற, தேர்ச்சியடையாத மாணவர்கள் பள்ள