ஓவியக் கல்லூரியில் மரண வாக்குமூலம்
1850ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஹன்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட கைவினை உற்பத்திக்கூடம்தான் பின்னாட்களில் ஓவியக் கல்லூரியாகப் பரிணமித்தது. இந்தியாவின் பழைமையான கல்லூரி. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட நுட்பமான கலைஞர்களைக் கொண்டு இங்கு வலுவான கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் மத்திய சிறைச்சாலைக் கைதிகளுக்கும் பங்குண்டு. சிறைச்சாலை - ஓவியக் கல்லூரி - தேவாலயம் - அருங்காட்சியகம் நேர்கோட்டில் அமைந்த இவற்றிற்கு வரலாற்றுத் தொடர்புண்டு. சென்னையின் பூர்வகுடி மக்கள் இக்கல்லூரியை உயிர்க் கல்லூரி என்றும் அருங்காட்சியகத்தைச் செத்தக் கல்லூரி என்றும் அழைப்பர். பொம்மைக் கல்லூரி என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. சென்னை ஓவியக் கல்லூரி இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பல ஓவிய சிற்ப ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது. ஆர்.பி. ராய் சௌத்ரி, கே.சி.எஸ். பணிக்கர், தனபால், கிருஷ்ணா ராவ், முனுசாமி,