விருதுகள் 4
டைம்ஸ் இலக்கிய விருது: பெருமாள் முருகன்
2012 முதல் மும்பையில் நடைபெற்று வரும் ‘டைம்ஸ் லிட் பெஸ்ட்’ இந்த ஆண்டு டிசம்பர் 15-17 தினங்களில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா நிறைவுநாளன்று பல்வேறு இந்திய மொழிகளில் பங்களிப்பு செய்த எழுத்தாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பத்து நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஆறு கட்டுரைத் தொகுப்புகள் என தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களித்தமைக்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு இந்த ஆண்டு தமிழ் மொழிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் ‘மொழியும் அதன் தன்மைகளும்’ என்ற தலைப்பில் கணேஷ் தேவி சிறப்புரை ஆற்றினார். உரையில் பெருமாள் முருகனின் எழுத்துகள் தமக்குப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னடத் துறவி பசவண்ணரை நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டார்.
- ஜெகந்த்