ஊர்சுற்றிப் பத்திரிகையாளனின் மறைவு
1985 செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி என்று நினைவு. அன்றிரவுதான் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி. தர்மலிங்கமும் ஆலாலசுந்தரமும் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்
திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஆங்கில வார ஏடான Saturday Reviewஇல் நான் பணிக்குச் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தன. எஸ்.எம்.ஜீ. (எஸ்.எம். பாலரெத்தினம்) அவர்களுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டிருந்த காலம்; அவருடைய குடும்பத்தில் ஒருவனாகவே நான் மாறியிருந்தேன். Saturday Review ஆசிரியரான காமினி நவரத்னவும் நானும் மதிய உணவுக்காகப் பெரும்பாலும் எஸ்.எம்.ஜீ. வீட்டுக்குச் செல்வது வழக்கமாகியிருந்தது.
ஆலாலசுந்தரமும் தர்மலிங்கமும் கொல்லப்பட்டது இரவில். காலையில் அந்தச் சேதியோடு எங்கள் அலுவலகத்துக்கு முதலில் வந்தவர் எஸ்.எம்.ஜீதான். காமினியும் வி. தர்மலிங்கமும் நல்ல நண்பர்கள் என்று எஸ்.எம்.ஜீ.க்குத் தெரியும். பல வழிகளிலும் Saturday Reviewக்கு