கடைசிக் கட்டியக்காரன்
அரைநூற்றாண்டுக் காலம் பத்திரிகையோடும் பத்திரிகைக்காரர்களோடும் வாழ்ந்து தனது வாழ்வை அர்த்தப்படுத்திய எஸ்.எம். கோபாலரெத்தினம் அண்மையில் மறைந்தார். கோபு என நீண்ட காலமும் எஸ்.எம்.ஜி. எனப் பிற்காலங்களிலும் அழைக்கப்பட்ட அவரோடு ஒரு சகாப்தம் நிறைவுக்கு வந்தது. பழைய முறையில் செய்திசேகரித்து, அச்சுக்கோர்த்துப் பத்திரிகையை உயிர்ப்போடு கொண்டுவரும் பாரம்பரியத்தின் கடைசித்தூண். தற்போதிய தகவற் தொழில்நுட்பச் சாத்தியங்களற்ற சூழலில் மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் அவர் ஆற்றிய பணியோடு ஒப்பிட்டுச் சொல்லத்தக்க யாரும் இன்று எம்மிடையே இல்லை.
யாழ்ப்பாணம் நீண்ட பத்திரிகைப் பாரம்பரியத்தைக் கொண்டது. 1816இல் அமெரிக்கன் மிஷனரிமார் தெல்லிப்பழையில் நிலைகொண்டதிலிருந்து, யாழ்ப் பாணத்தில் கல்விசார் நடவடிக்கைகள் பலவும், அதன் தொடர்ச்சியாகப் பத்திரிகை வெளியீடும் நிகழ்ந்தன. முதலில் 1820இல் மிஷனரிமாரால் கொண்டுவரப்பட்