யோ. கர்ணன்
‘கொலம்பஸின் வரைபடங்கள்’, ‘தேவதைகளின் தீட்டுத்துணி’, ‘சேகுவேரா இருந்த வீடு’ ஆகிய புனைவுப் பிரதிகளின் வழியாக பரந்த தளத்தில் அறிமுகமாகியவர் யோ. கர்ணன். ஈழப்போர் பற்றிக் கட்டமைக்கப்பட்டிருந்த புனிதக் கதையாடல்களை உடைத்து விசாரணை செய்யும் எழுத்துகளை முன்வைத்ததன் மூலம் இந்தக் கவனம் யோ. கர்ணனுக்குக் கிடைத்தது. இதனால், எதிரும் புதிருமான வாதப்பிரதிவாதங்களில் அதிகம் பேசப்பட்டார் கர்ணன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாகச் செயற்பட்ட அனுபவங்களையும் அந்த இயக்கத்தின் உள் விவகாரங்களையும் அடிப்படையாகக் கொண்ட கதைகள் என்பதால் கர்ணனுடைய கதைகள் மறுக்கமுடியாத நிலையை ஈழப்போரபிமானிகளுக்கு உண்டாக்கியது. இருந்தபோதும் அவர்கள் இந்தக் கதைகளை எதிர்கொள்ளத் தயங்கினர். “உண்மையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, எனக்கு வேறு வழியில்லை” என்றார் கர்ணன். &ldqu