வீழ்ந்தவர்கள்
இந்த நேரத்தில் என்னென்ன காரியங்களில் லியாம் மூழ்கியிருக்கிறானோ என்ற நினைப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வாசிப்பு அறையில் அதன் பலகையில் விரித்துவைக்கப்பட்டிருந்த புத்தகத்திலிருந்து பென்சிலால் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் பாதிரியார்களும் மாணவர்களும் ஏதோ வேலையில் மும்முரமாக இருந்தனர். அங்கிருந்த உயர்ந்த குமிழ்கூரை என்னை ஒரு மண்டை ஓட்டுக்குள், மூளைக்குள், மனதுக்குள் வைத்திருப்பது போல் உணர்ந்தேன். அப்படியானால் அது எங்களை வாசிப்பவர்களை - என்னவாக ஆக்குகிறது?
‘ஓ’கானல் நினைவுச் சின்னக் கமிட்டியின் அறிக்கை’ உதாவாக்கரையாக இருந்தது. ஆனாலும் நான் நாள்முழுவதும் அதனுடன் கழித்தேன். ஐந்தரை மணியளவில் என் தோள்கள் வலியெடுக்கவே, எனது குறிப்புகளை எடுத்துப் பையில் வைத்துவிட்டு அறிக்கையைத் தனது மேஜையில் உட்கார்ந்திருந்த திரு. கார்ட்டனிடம் தந்தேன். பொடுகுச் சிதறல்கள் அவரது மிகவ