யதார்த்தன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் படித்துக்கொண்டிருக்கும் யதார்த்தனுக்குப் புனைவிலும் மரபு, தொன்மங்களிலும் பெருத்த ஈடுபாடுண்டு. இது தொடர்பான களப்பணிகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதைப்போல, இயற்கை மீதும் அளவற்ற பிடிப்புண்டு.
யுத்தமும் அது உண்டாக்கிய அனுபவங்களும் யதார்த்தனுக்கு அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் புதிய கேள்விகளை எழுப்பி, புதிய அறிதல்களை உண்டாக்கியுள்ளன. இவற்றின் கூட்டு விளைவாக, ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’ என்ற தொகுதி வெளிவந்துள்ளது. யதார்த்தனின் கதைகள் பன்முக வாசிப்புக்குரியன. நேர்கோட்டு எழுத்துமுறையைத் தவிர்க்கும் கதைகளில், புனைவின் உச்ச சாத்தியங்களைக் கண்டடைய முயற்சிக்கும் எத்தனம் தொனிக்கிறது.
உண்மை, அறம் என்ற இரண்டு அடிப்படைகளை மையப்படுத்தித் தன்னை முன்வைக்க விரும்பும் எழுத்துக்காரர். இதனால், பொதுப்