கலையரசி
மாலை நேரத்து மஞ்சள் வெயில் நிலமெங்கும் பூசிவிட்டது போலிருந்தது. பூக்களும் இலைகளும் நிறைந்த நீண்ட வேலியை பிய்த்துக்கொண்டு அருவிகளாய் உள்நுழையும் தேம்ஸ் நதியின் கிளையொன்று, அதன் ஓரமெங்கும் உயர்ந்து வளைந்து நிற்கும் பசிய புற்களைச் சீண்டி உரசிவிட்டு மீண்டும் வளைந்து மேற்கு நோக்கி அதே பாதையில் ததும்பித்ததும்பி ஓடுகிறது.
நீர் அலையும் மெல்லிய ஓசை வெகுதூரம் வரை மெதுவாகக் கேட்டபடி இருந்தது.
லண்டனின் நகர்ப்பகுதியையொட்டி அமைந் திருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற ‘கியூ’ப் பூங்காவிற்கு அப்பால் நான் போக வேண்டிய அந்த உயர்மாடிக் கட்டடம் இருந்தது.
பூங்காவினுள் வளைந்து நெளிந்து செல்லும் நீண்ட தார்ப்பாதைகளில் அழகிய இளம் வெள்ளையினப் பெண்கள் ஓட்டிச் செல்லும் குதிரைகளின் குளம் பொலிகள் கேட்ட வண்ணமிருந்தன. கண்ணுக்குத் தெரிந்த தூரம்வரை சடைவிரித்து நிற்கும் பெரு விருட்சங்கள். காற்றோடு இலைகள