வரையறுத்தல்
களிமண்ணைக் குழைத்துக் கொட்டாங் குச்சியில் போட்டுக் கருவை இலைகளைத் தூவிக் கூட்டாஞ்சோறு தயாராகிவிட்டது. எண்ணெய் சீந்தாத தலையின் செம்பட்டை முடிகள் முன்வந்து விழ, புறங்கையால் முடியை ஒதுக்கி மேலேற்றுகிறாள் மாலதி. சமையல் தயாரான திருப்தியில் மாதேஸ்வரனை ஏறிடுகிறாள்.
முதல் பிடியைக் கொட்டாங்குச்சியிலிருந்து கிள்ளியெடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக்கொள்கிறாள். ஏந்தலுக்காக இடது கையால் வலது கையைத் தூக்கிச் சூரியனுக்கு எதிரே ஏந்தியவாறு, “எனக்கு நல்ல படிப்பு கொடு சாமி; அப்பாம்மாவ காப்பாத்து சாமி, மாதேஸுக்கு ஜொரம் வரக்கூடாது சாமி,” என்று வேண்டுகிறாள். மாதேஸ் சிரிக்கிறான்.
“என்னடா இளிப்பு,” என வெட்டித் திரும்பு கிறாள்.
உதட்டைக் குவித்துக்கொண்டு பழிப்பு காட்டுகிறான்.
“போடாங்கிட்டு” என கழுத்தை மீண்டும் நொடிக்கிறாள்.
“அப்பா இ