கடல் இரவில் பாடுகிறது
பாதி இரவில் இரவுநேர ஆடைகள் முழுக்க நனைந்திருக்க நீ உதறிக் கொண்டு விழிக்கிறாய். உன் உதறலும் தெளிக்கும் நீரும் என்னையும் எழுப்பிவிடுகின்றன. சாளரம்வழி வீசும் நிலவொளியில் படுக்கையின் உனது பாதி உடல் கடலாக மாறியிருப்பதைப் பார்க்கிறேன். அப்போதுதான் நீ என்னை இழந்துவிடுவாய், உனது நங்கூரங்களை இழந்துவிடுவாயென அஞ்சு கிறேன். அப்போதுதான் நீ நீந்திப் போய்விடுவாயென அஞ்சுகிறேன்.
நமது அடுக்குமாடி வீட்டிலிருந்து உன்னால் கடலைப் பார்க்கமுடியும், ஆனால் அது ஒன்பது மாடி கீழே போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலையைத் தாண்டி ஞெகிழிப் பைகளும் காலி உணவு சுருட்டிய தாள்களும் இறைந்துகிடக்கும் மந்தமான கடற்கரைக்கு அப்பாலிருக்கிறது. அதனால்தான் நீ அடுப் பறையில் அவ்வளவு நேரத்தைக் கழிக்கிறாயா? இந்த நள்ளிரவுப் பைத்தியக்காரத்தனத்துக்குப் பின்னும் ஆடைகளிலிருந்தும் தோலிலிருந்தும் நீர் வடிந்து பல தாரைகளாகத் தரையில் பின்தொடர அடுப்பறைக்கு விரைகிறாய். உனக்கென நான் வாங்கிய சிறிய மீனைக் கிண்ணத்திலிருந்து எடுத்துப் பச்சையாக விழுங்குகிறாய். நீ பசியோடும் அச்சமுற்றும் அடைபட்டதாகவும் தோன்றுகிறாய். நான் உன்னை அணைத்துக்கொள்ள வேண்டா