ஏழாவது மாதம்
Courtesy: Hershil Meraiya
திருமணம் முடிந்த நாளிலிருந்து அவளுக்குள் பயமும் சந்தேகங்களும் நிறைய தோன்றியிருந்தன. எப்படி ஆகுமோ, தன்னால் தாங்க முடியுமா என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தாள். பயத்துக்கும் சந்தேகங்களுக்கும் விடைகொடுக்கும் வேளை விரைவில் வரப்போகிறது. ஆனாலும் பதற்றத்துடன் இருந்தாள். உள்ளங்கைகளிலும் முன் கைகளிலும் மருதாணியில் கோலம்மாதிரி வரைந்திருந்தாள். அதிலிருந்து மெல்லிய நறுமணம் கமழ்ந்தது. அவள் அணிந்திருந்த துப்பட்டாவில் தங்க ஜரிகையில் பூ வேலைகள் செய்யப்பட்டிருந்தன; தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரங்களிலிருந்தும் இனிய மணம் வீசியது. ஆனால் இவையெல்லாம் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அவளது அழகான அலங்காரம் வியர்வையில் ஈரமாகி முகம் களையிழந்து காணப்பட்டது.
“உடம்பு சரியில்லையா, ஏதாவது வலியா?” பக்கத்து வீட்டுப் பாட்டி கவலையுடன் கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. நன