சிற்பி தனபால் நூற்றாண்டு - 1919 – 2019
கலைத்துறையில் சென்னை கலைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவரான சிற்பி தனபாலின் நூற்றாண்டு இது. சிற்பியாகவும் ஆசிரியராகவும் கலைத்துறைக்குப் பெரும்பங்காற்றியவர் அவர்.
1919இல் சென்னையில் பிறந்தவர் தனபால். சென்னை கலைத்துறைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார். அதே கல்லூரியில் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார். 1967இல் துணை முதல்வராகவும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராகவும் பொறுப்பேற்றார். 1977ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அவரது பணிக்காலத்தை ஓவிய, சிற்பக் கலையின் பொற்காலம் என்று கலை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஓவியம் பயின்றவர்; எனினும் தனபால் தனது கலை ஊடகமாக ஏற்றுக்கொண்டது சிற்பத்தைத்தான். திராவிடக் கலை மரபையும் மேற்கத்திய நவீனத்தின் கூறுகளையும் இணைத்து அவர் உருவாக்கிய சிற்ப மரபு முன்னோடித் தன்மைகொண்டது. அவர் வடித்த அவ்வையார், இயேசு சிற்பங்கள் திராவிடக