சிற்பி தனபால் நூற்றாண்டு - தாவரங்களின் மொழியறிந்த சிற்பி
சென்னை கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்தபோது எல். முனுசாமிதான் கல்லூரி முதல்வராய் இருந்தார். வகுப்பாசிரியராக ஆர். பி. பாஸ்கரன் இருந்தார். இருவருமே இந்தியக் கலைச் சூழலில் தவிர்க்க முடியாத ஆளுமைகள். தனபாலை எனக்கு நெருக்கமாகத் தெரிய வந்ததும் பாஸ்கரனால்தான். அதற்கெல்லாம் முன்பு சக ஓவியர் ஒருவர் தனபாலிடம் என்னை அறிமுகப்படுத்தியபோது, ஏதோ ஆழ்ந்த யோசனையில் ‘அப்படியா...!’ என்று கடந்து சென்றிருந்தார். மேலதிகமாக எதுவும் பேச இயலவில்லையே என்ற ஏக்கம் நீண்ட நாட்களுக்கு இருந்தது. திரும்பத் திரும்ப அவரைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தபோதும் நெருங்கிச் சென்று பேசத்