சிற்பி தனபால் நூற்றாண்டு - கலையிலிருந்து கலைக்கு...
என்னிலும் பெரியவர். வயது வித்தியாசம் அதிகம். இருந்தாலும் தனபாலின் தங்கை மகனை எனக்குத் தெரியும். பூம்புகார் அவருடைய சொந்த ஊர். அங்கு நான் அப்போது வேலை செய்துகொண்டிருந்தேன். நாகலிங்கம் என்பவரின் நண்பர் அவர். தனபாலிடம் கொண்டுபோய் அறிமுகம் செய்கிறேன் என்று சொல்லியிருந்தார்.
அந்தச் சமயத்தில் கவின் கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பம் போட்டிருந்தேன். நேர்முகத் தேர்வை எழுதிவிட்டு நல்லதொரு தகவலுக்காகக் காத்திருந்தேன். எல்லாருக்கும் கல்லூரியில் சேருவதற்கான கடிதம் வந்திருந்தது. எனக்கு எந்தத் தகவலோ கடிதமோ வந்து சேரவில்லை. ஓவியம் படிக்கவில்லையெனில் நான் சூ