வரலாறு என்றால் என்ன?
முற்கால இந்திய வரலாறு குறித்து நாம் புரிந்து கொண்டதில் மாபெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது ரொமிலா தாப்பர் எழுதத் தொடங்கிய பிறகுதான். வரலாறு எழுதப்படும் முறையையும் புரிந்துகொள்ளப்படும் விதத்தையும் அவருடைய படைப்புகள் பெருமளவில் மாற்றிக்காட்டின. இந்தியர்கள் வரலாற்றுணர்வு அற்றவர்கள் என்னும் காலனியாதிக்கக் கருத்தியலைத் தனது தனித்துவமான ஆய்வுகள்மூலம் திருத்தியமைத்தவர் தாப்பர். முதல் நூல், ‘Asoka and the Decline of the Mauryas’ (1961). 2013ஆம் ஆண்டு வெளிவந்த The Past Before Us: Historical Traditions of Early North India அவருடைய தலைசிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. A History of India, Vol. 1 (1966), From Lineage to State (1984), Sakuntala (1999), Cultural Pasts (2000), Somanatha (2004) உள்ளிட்ட பல நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மதிப்பு