இளைய நெஞ்சிலே
1
நெற்றியில் நுழைந்த தோட்டாத் துளையினூடே
தகப்பனின் கடைசிப் பார்வை.
நீதிதேவதையின் கட்டப்பட்ட கண்ணுடன் பொருந்தும்
கொல்லப்பட்டவனின் கண்;
அது தாய்மொழிபோல வாசிக்கும்
நமது செயல்களின் நீதியை.
மனமே பார்க்கும் மரித்தோரை
மனத்துள் உலகின் சாரமான நீதியை.
என்றிப்படிப் பலதும்
எவரெவரோ சொல்வதைப்
புராணம்போலக் கேட்டபடி
அப்பாவின் கடைசிப் பார்வையை நினைத்து,
பன்னிரு வயதில், பலிபீடத்தில்,
யாரோ கூட்டிவந்து உட்காரவைத்த இருப்பில்,
வேலுப்பிள்ளை பிரபாகரன் மகன், பாலு.
வேலும் மயிலும் அருகிலிருந்தால் அவன்
அழகன், பால முருகன்.
2
உயிர்ப்பிணங்களை அடுக்கிவைத்த
நாஜிமுகாம் பலகைத்தட்டுகள்போல
அவனுக்