நிலானியின் கோட்டோவியங்கள்: எல்லையுரு, எதிர்ப்பு, அடையாளம்
முன்பு இருந்தது. இப்போது இல்லை
மீளத்தோப்பாகும் என்ற நம்பிக்கை போயிற்று
எனவே இது
என்
வறுத்தலைவிளான்
ஊருக்கு
-திருமாவளவன்
1990இன் கடைசி மாதங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்கின் பல சிறுபான்மை நிலப்பரப்புகள்போல யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பலாலி இராணுவ முகாமை மையமாகக் கொண்ட தமிழ்க் கிராமங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தை விரிவாக்குவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டன. ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்கள் தங்கள் நிலபுலங்களை முழுமையாக இழந்து இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலும் சிதறிப்போனார்கள்: அவர்தம் ஊர்கள் உருவிழந்து பேய்கள் உலாவும் கொடுவனமாகிப் போயின. பிறந்து 45 நாட்களேயான நிலானி இந்த நாட்களில்தான் வசாவிளான் எனும் தன்னூரை இழந்தார்.
இடம்பெயர்ந்த பல குடும்பங்களைப்போல நிலானியின் குடும்பமும் தொடர்ந்து இடம்பெயர்ந்தது. யாழ்