மேற்கத்தியப் பல்கலைக்கழகமும் இனவாதமும்
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் பல கேள்விகளில் ஒன்று: ‘மேற்கத்திய பல்கலைக்கழகத்தில் இனவாதத்தைச் சந்தித்திருக்கிறீர்களா?’ இது நாகப்பாம்பின் நாக்கில் விஷம் இருக்கிறதா என்பதைப் போன்றது. இக் கேள்வியைப் பல்கலைக்கழகப் பாணியில் கட்டுடைத்தால் இதற்குப் பின்னால் மறைவடக்கமாய்ப் பொதிந்திருக்கும் பொருள்: புத்திநெறியைப் பேணும் இடங்களில் இனவாதத்திற்கு இடமில்லை; அறிவுத் திறனுடையவர்கள், ஆழ்ந்து சிந்திப்பவர்கள்.
இனத்துவேஷமானவர்கள் அல்லர்; எதிர்வினைகளையும் தாராளத்தையும் போதிக்கும் வகுப்பறைகளில் இனவெறிக்கு இடமே இல்லை. இந்த வரிகள் வாசிப்பதற்குச் சுகமாக இருக்கிறது. ஆனால் நடைமுறைக்கு முற்றும் மாறானது. நான் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக பார்மீங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் புழங்கியிருக்கிறேன்; முதலில் முனைவர் பட்டப்படிப்பு மாணவராகவும் பிறகு பேராசிரியராகவும். இதுவரைக்கும் தனிப்பட்ட முறையில் என்னைப் ‘பாக்கி