ஓடாத நதியின் ஓடம்
தமிழின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்கள் பட்டியலிலுள்ள மகேந்திரனின் மறைவு தமிழ் சினிமா நேசர்களுக்குக் கவலையைத் தரும் ஒன்று. ஆனால் அவருடைய படங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்காதவர்கள்கூடச் செவிவழியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் தாம் அறிந்தவற்றைக் கொண்டு உணர்ச்சிப் பெருக்குடன் மிகை வர்ணங்களை அவருடைய படங்களுக்கு வழங்கத் தொடங்கியமைதான் ஆச்சரியம்.
ஜே. மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ (1978) திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர். தயாரிப்பாளரின் அவநம்பிக்கையையும் மீறி இந்தப் படம் பலதரப்பட்ட ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. தமிழ்த் திரையுலகில் ஏற்கெனவே சில படங்களுக்குக் கதை, கதை வசனம், திரைக்கதை போன்ற பிரிவுகளில் பங்களிப்புகளை வழங்கியிருந்தாலும் அவரின் பெயர் மேலும் கவனம் பெறத் தொடங்கியது இத்திரைப்படத்தின் பின்புதான். ‘கோனார் நோட்ஸ் படித்துவிட்டுப் பரீட்சை எழுதப்போகும் மாணவனாக, திரையுலகில் என்னை நடத்திச் செல