உயிர்த்த ஞாயிறு பலியும் பழியும்
உயிர்த்த ஞாயிறு
பலியும் பழியும்
ஏப்ரல் மாதம் 21 அன்று உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் இலங்கையில் நிகழ்ந்தன. பயங்கரமான இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் தீவிரவாதத்தைச் சிந்தாந்தமாக விசுவாசிக்கிற ஒரு முஸ்லிம் குழுவினர். பண்பாட்டுத் தளத்திலும் மதத் தளத்திலும் பல ஆண்டுகளாக இவர்கள் மெல்லமெல்ல வளர்ந்துவந்தபோதிலும் எதிர்பாராததாகவும் பேரதிர்ச்சி தருவதாகவும் அமைந்தன இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள். இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறப் போகின்றன என இலங்கை அரசுக்குப் பலமுறை எடுத்துரைக்கப்பட்ட போதும் அரசு அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை.
தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை பத்தாண்டுகளுக்கும் முன்னர் இருந்த போர்ச் சூழலுக்குச் சென்றுவிட்டது. அவசரகால நிலை, பயங்கரவாதச் சட்டம்,