தீண்டாய்
கவிதை
கீதா சுகுமாரன்
ஓவியம்: ஜி. ராமன்
தீண்டாய்
இருள் சூழ்ந்த அதிகாலை
நீர் துளிர்க்கும் சுருள்நீள்
கூந்தல் அளைந்து தேகம் கிளர்த்தி
வெப்பம் படர்த்தி முகர்ந்து
அலைபாயச் செய்கிறான்
மறுத்து இழுத்து மூடுகையில்
மாமத யானையாகி
துரத்தி ஆடை விலத்தி
இடைமடிப்பில் ஈரமுத்தம் பதிக்கிறான்
சாயும் அந்தி
வெள்ளிகளை மெல்லமெல்ல
அவிழ்க்கும் போதில்
நாசிவிடைக்க இதழ்பிரித்து
உள்ளிறங்கி நிறைந்து
உயிர்ச்சுவாசம் விதிர்த்துக் கலக்க
முயங்கிப் புதையும் நிலவில்
அடர்மேகம் எரிக்கிறான்
மோகம் கொண்டு நித்தமும்</p