நெய்தல் வழங்கும் இரு விருதுகள்
நெய்தல் வழங்கும் இரு விருதுகள்
இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது
அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழ்ச் சூழலின் தரத்தை மேம்படுத்துவது பற்றிப் பேசியும் எழுதியும் வந்தவர் சுந்தர ராமசாமி. அவர் நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருதளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவுசெய்து, 2007ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்துவரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ‘படைப்பு’ என்பது விமர்சனம், ஆய்வு, பதிப்புப்பணிகளையும் உள்ளடக்கியதாகக் கருதப்படும். நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பதும் அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும் பத்தாயிரம் ரூபாயும் அடங்கும்.
சிறந்த கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் விருது
நவீனத் தமிழ்க் கவிதை பற்றிய பார்வை என்றவுடன் நினைவுக்குவரும் பெயர் அ. ராஜமார்த்தாண்டன். நாற்பது ஆண்டுக் காலமாகத் தமிழ்க் கவிதை பற்றிப் பேசியும் எழுதியும் வந்தவர். கவிதையுடன் நீடித்த உறவுகொண்டிருந்தவர். கவிதையின் போக்குகளையும் அழகியலையும் வரலாற்று அடிப்படையில் மதிப்பிட்டதோடு, புதிய திறமைகளையும் அடையாளம் கண்டு அறிமுகப் படுத்தியவர். ஈழக் கவிதையின் மேல் தனிக் கவனம் செலுத்திய ராஜமார்த்தாண்டன் தன்னளவில் கவிஞராகவும் இருந்தவர். அவரது நினைவைப் போற்றும் வகையில் 2009 முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் கவிஞர் ஒருவரின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. பாராட்டுப் பத்திரமும் பத்தாயிரம் ரூபாயும் அடங்கும்.
இரு விருதுகளுக்கும் 2019 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பரிந்துரைக்கலாம்.
தொடர்புக்கு:
நெய்தல் கிருஷ்ணன்,
சரவணா இல்லம்,
51, ஈத்தாமொழிச் சாலை,
கோட்டாறு, நாகர்கோவில் 629002.
கைப்பேசி: 9443153314.