கூட்டாஞ் சோறு
கதை
கூட்டாஞ் சோறு
பா. செயப்பிரகாசம்
ஓவியம்: கண்டி நரசிம்மலு
தகிக்கும் மண்மேல் கோடையின் தீக்கொளுந்துகள் தணிந்து தனுமை பரவிற்று. கோணல்மாணலாய், குறுக்குமறுக்காய்ப் படுத்திருந்த மேகங்கள், நிலாவைக் கண்டதும் ‘சல்யூட்’ அடித்து ஒதுங்கி விறைப்பாய் நின்றன. ஆடாது அசையாது நின்ற மேகங்களின் நடுவில் ஆகாய நிலா ஊரின் வடக்கு வீட்டு முற்றத்தைக் கண்டது.
ஊரில் பெரிய வீடு வடக்கு வீடு. அது அகன்ற பெரிய தெரு. பெரிய வடக்குத் தெருவில் தொடங்கும் ஊர், தெற்கே போகப் போக அகலம் சுருங்கிக் கூம்பு போலானது.
நிலா பார்த்துக்கொண்டிருக்க, வடக்கு முற்றத்தில் சின்னப்பிள்ளைகள்