காவியரூபன்
அஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)
காவியரூபன்
சுகுமாரன்
ஓவியம்: றஷ்மி
ஆற்றூர் ரவிவர்மா எண்பத்தொன்பதாம் வயதில் மறைந்தார். மறைவுக்குச் சில ஆண்டுகள் முன்பே அவரது நினைவாற்றல் குன்றத் தொடங்கியிருந்தது. முதுமைப் பருவ நோய்கள் அவ்வப்போது படுக்கையில் வீழ்த்தியிருந்தன. எனவே அவரது மறைவை இயல்பான ஒன்றாகவே மலையாள இலக்கிய உலகம் ஏற்றுக்கொண்டது. ‘நாள் குறிப்புகள்’ என்ற கவிதையில் தனது மதிப்புக்குரிய கவிஞரான பி. குஞ்ஞிராமன் நாயரை நினைவுகூரும் விதமாகவும் அவரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும் வகையிலும் ஆற்றூர் எழுதினார். ‘போய