கடைசி விதைப்பாடு
கதை
கடைசி விதைப்பாடு
மு. குலசேகரன்
ஓவியங்கள்: மணிவண்ணன்
அந்த இடத்துக்கு, காலை வேளையில், எவ்வித எதிர்ப்புமில்லாத சூழலில் ஒரு சாதாரண நிகழ்வைப்போல் அரசாங்க வாகனங்கள் வந்து நின்றன. சரக்கு ஊர்தி ஒன்றின் பின்புறத்தில் சுண்ணாம்பு பூசப்பட்ட சிறிய கருங்கல் தூண்கள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் மேல் கூலியாட்கள் துக்கம் காப்பதைப் போல் மௌனமாகக் குத்துக்கால்களிட்டு அமர்ந்திருந்தார்கள். மற்றொரு வாகனத்தில் உதவி அலுவலர்களும் நில அளவையாளர்களும் கடைநிலை ஊழியர்களும் தகுதிகளுக்கேற்ப வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். கம்பிகளிட்ட சன்னல்களுடன் கூண்