குழந்தையும் குடும்பமே
கதை
குழந்தையும் குடும்பமே
அசோகமித்திரன்
ரயிலில் பயணம் செய்யும்போது இரவில் விழிப்பு வந்துவிட்டால் விடியும்வரை ஒவ்வொரு கணமும் துன்பம். ரயில்காரர்கள் இரவு ஒன்பதுமுதல் காலை ஆறுமணிவரை படுத்தபடியே இருக்க வேண்டும் என்று விதி விலக்கில்லாத ஏற்பாடு செய்துவிட்டார்கள். எழுந்து உட்கார்ந்துகொண்டால் இரவானாலும் ஜன்னல் வழியாக இருட்டைப் பார்த்தபடி இருக்கலாம். ஆனால் தலையைத் தூக்கினால் தலையில் இடித்துக்கொள்ள வேண்டும் .
பவானி படுத்தபடியே ஜன்னலைப் பார்த்தாள். ஏதோ பெரிய நிலையத்திலிருந்து ரயில் கிளம்பிக்கொண்டிருந்தது. அநேகமாக திருச்சியாகத்தான் இருக்கும். மூன்று மூன்றரை மணிநேரத்தில் மதுரை