காந்தி ஆதரித்த சத்தியவதியின் காதல்
கட்டுரை
காந்தி ஆதரித்த சத்தியவதியின் காதல்
கோ. ரகுபதி
சில வருடங்களுக்கு முன், பாரதி இதழைக் கால வரிசையில் பார்த்தபோது 1930 ஜனவரி மாதத்தில் க. ஆதிநாராயணா எழுதிய ‘எனது கலப்பு மணம்’ (பக். 11 - 25) கட்டுரையைக் கண்டேன். அவருடைய காதல், கலப்பு மண வரலாற்றைச் சுவாரசியமாக வாசித்தேன். இவ்வாறும் ஒன்று நிகழ்ந்தது என அதைக் கடந்தேன். 1930 டிசம்பர் மாத பாரதியில் ஆ. சத்தியவதி அம்மையார் எழுதிய ‘எனது காதலின் வெற்றி’, (பக். 92 - 103) கட்டுரையைப் படித்தபோது க. ஆதிநாராயணா தன் கட்டுரையில் கூறிய நிகழ்வுகளும் இடையிடையே குறுக்கிட்டன. வாசிப்பின் ஒரு கட்டத்தில் சத்தியவதியின் காதலர் ஆதிநாராயணாவா எனச