வண்ணம் பூசிய கயிறுகள்
கல்விப் பக்கங்கள்
வண்ணம் பூசிய கயிறுகள்
தி. பரமேசுவரி
மே மாதத்தின் சோம்பலான காலைப்பொழுது. சற்றுத் தாமதமாக உறக்கத்திலிருந்து எழுந்தேன். முற்றத்தில் காயப்போட்டிருந்த துணிகளின்மேல் உரசிவிட்டாரென்று பாட்டி யாரையோ உரத்துத் திட்டிக்கொண்டிருந்தார். துணியைத் தொட்டதற்காகவா திட்டுகிறார் என்ற அதிர்ச்சியோடு அம்மாவிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது கழிவறைகளைக் கழுவுபவர் என்றார். அந்தக் கொடுங்காலை இப்போதும் என் மனத்தில் அப்படியே உறைந்திருக்கிறது.
அம்மாவழிப் பாட்டியின் வீடு சென்னையில் தண்டையார்ப்பேட்டையில் இருந்