அசுரன்: சாகசம் எனும் மிகை
திரை
அசுரன்: சாகசம் எனும் மிகை
ஸ்டாலின் ராஜாங்கம்
தமிழில் ஒடுக்கப்பட்டோரின் பின்புலத்தைக்கொண்டு ‘அசுரன்’ வெளியாகியுள்ளது; வணிகரீதியாகவும் அது பெருவெற்றி பெற்றிருக்கிறது. பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவியது இப்படம்; முதல் பாதி நாவலைத் தழுவியது. படைப்பொன்றைத் திரைப்படமாக எடுக்கப்போகிறோமெனில் அதை அப்படியே முழுமையாகப் பிரதியெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படைப்புக் களமோ பாத்திரங்களின் குணாம்சங்களோ சிறு உணர்வோ கூடப் போதுமானது. ஒருவரிகூட அதற்கு உதவி செய்யலாம். படைப்புகளைத் திரைப்படமாக்குவதற்குத் தமிழில் முன்னுதாரணங்களாகக் காட்டப்படும் ‘முள்ளும் மலரும்’, &lsqu