கவிதைகள்
கவிதைகள்
ச. துரை
Courtesy: Babu Namboodiri K
நிறைய ஆசைப்படக் கூடியவனாக
புதைநிலையை விரும்பக் கூடியவனாக
முகத்தை மூடியபடியே
அவ்வளவு பெரிய ஏகாந்தத்திலிருந்து
அம்மாவின் கைகளில் விழுந்தபோது
அவள் என்னைக் கட்டியணைத்தாள்
சிவந்த என் கன்னங்களைக் கிள்ளி உயிர் சோதித்தாள்
எனக்கான எந்தக் கனவுகளையும் அவள் காணக்கூடாது
அதை நானும் விரும்பமாட்டேன் என்பதை
தெரிவித்தபோதே வேகவேகமாகக் கீழிறக்கி
ஓங்கி உதையொன்று வைத்தாள்
நெடுநெடுவென வயது இருபத்தேழாகிவிட்டது.
எனக்குச் சேவகம் செய்யவே
அப்பா படைக்கப்பட்டவரானார்<