திமிழ்
திமிழ்
பாரதியார்
வேதபுரத்தில் நெட்டைப்பனை முதலியார் என்றொரு புலவர் இருக்கிறார். அவர் தொல்காப்பியம் முதலிய தமிழிலக்கணங்களிலும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்கத்து நூல்களிலும் சிந்தாமணி, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலிய காவியங்களிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவராய்த் தமிழ்ப் புலமையில் தமக்குநிகர் தமிழ்நாடு முழுதிலுமில்லை யென்ற கர்வம் படைத்திருக்கிறார், நெடுங்காலமாக நான் இவருடைய கீர்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேற்று மாலைவரை இவரை நான் நேரே பார்த்தது கிடையாது.
நேற்று இவர் தாமாகவே தம்முடைய சீடப்பிள்ளை யொருவனுடன் என்னை வந்து பார்த்தார். அந்தச் சீடப்பிள்ளை அவரைக் காட்டிலும் ஒன்றரைச் சாண் அதிக உயரம். அவன் பெயர் கும்பகர்ண முதலியார்.
இரண்டு பேருக்கும் நாற்காலி கொடுத்து உட்காரச் சொன்னேன். நெட்டைப்பனையார் உட்கார்ந்தார். கும்பகர்ணன், குரு ஸந்நிதானத்தில் உட்காரும் வழக்க