ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்: இருள் மூடும் பொன்விழா
கட்டுரை
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்: இருள் மூடும் பொன்விழா
ஜானகி நாயர்
எந்தவொரு நிறுவனத்திற்கும் அதன் பொன்விழா அமைதியாய் இருளில் கரைந்துபோகும் நிகழ்வு அல்ல. ‘தனித்துவமான கற்பித்தலையும் ஆராய்ச்சியையும் கொண்ட முதன்மைப் பல்கலைக்கழகம்’, எனத் தனது ஐம்பதாண்டுக் கால இருப்பை நினைவுகூரும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அத்தகைய நிலைக்கு அருகில் வந்தடைந்துள்ளது. பொன்விழா ஆண்டு, குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏதுமற்ற, மந்தமான, அரசியல் அளவில் கேள்விக்குரிய சில நிகழ்ச்சிகளைத் தவிர பெரும்பாலும் (இதில் பொன்விழா நினைவுச் சின்னத்தைத் தனக்கு நெருக்கமான நிறுவனம் நிதியுதவி அளித்த ந