பழம் விடு தூது
கவிதைகள்
ஸ்டாலின் சரவணன்
ஓவியம்: ஜெபா பெட்ஸி
பழம் விடு தூது
அவள் வாசலில் நின்று கொய்யா ஒன்றைக்
கடிக்கும்போதெல்லாம் என் கண்ணில் பட்டுவிடுகிறாள்.
அரசர் சிறுவயதில் முதலைக்குட்டி வளர்த்த கதை அறியாதவர்களுக்கு
இது ஒரு விநோதமானதுதான்.
அவளுக்கே தெரியாமல்
அவள் பாதங்களைத் தொழுமாறு
கொய்யாப் பழங்களை உருட்டிவிடும் பணியைச் சிரமேற்கொண்டு செய்யும்
சிறு தொண்டன் நான்.
திடுமென கொய்யா தன் பருவத்தை இந்த நிலத்தில் முடித்துக்கொள்ளும் வேளை நெருங்குகிறது.
நிலமே கொய்யாவே என உருள்கிறேன்.<b