‘விளக்கு’ விருதுகள் 2018
‘விளக்கு’ விருதுகள் 2018
அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23வது (2018) ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் எழுத்தாளர்கள் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் பாவண்ணன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன.
1996ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் (புனைவற்ற எழுத்து), எழுத்தாளர் பாவண்ணன் (புனைவெழுத்து), ஆகிய இருவரையும் எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும்.. விழா பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
விருதுபெறும் எழுத்தாளர்களுக்கு காலச்சுவடின் வாழ்த்துக்கள்.