ஒரு நாளும் இன்னொரு நாளும்
ஒரு நாளும் இன்னொரு நாளும்
ஓவியர்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
மூன்றுவார விடுமுறையில் குடும்பத்தோடு வந்திருக்கிறான் மூத்தவன். மூன்று நொடிகள்போலப் பறக்கப்போகும் இருபத்தொரு நாட்கள். அப்புறம் அடுத்த முறை வருவதற்கு இரண்டு வருடமோ மூன்று வருடமோ. மிஞ்சிப்போனால், இன்னும் நாலைந்துமுறை அவன் வருவதற்குத்தான் தான் ஆயுசோடு இருக்க வாய்ப்பிருக்கும் என்று திடீரென்று தோன்றியது அங்குசாமிக்கு. அதாவது, பனிரெண்டு அல்லது பதினைந்து வாரங்கள் பேரக்குழந்தைகளோடு சேர்ந்திருக்கலாம்.
மற்றபடி, ஸ்மார்ட் டிவியில் அவர்களைப் பார்க்கலாம்; அதில் மாட்டிய காமிரா மூலம் அவர்களுடன் பேசலாம். மாதத்தில் ஓரிருமுறை அந்த பாக்கியம் வாய்க்கும். கண்ணாடிச் சுவருக்கு அந்தப்பக்கம்