பெரிய இறக்கைகள் கொண்ட கிழவர்
கதை
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
ஸ்பானிய மொழியிலிருந்து தமிழில்: மா அண்ணாதுரை
பெரிய இறக்கைகள் கொண்ட கிழவர்
மழை விழுந்த மூன்றாம் நாள் வீட்டுக்குள் ஏராளமான நண்டுகளைக் கொன்றுவிட்டதால், பச்சைக் குழந்தை இரவைக் காய்ச்சலோடு கழித்ததற்கு வீச்சம்தான் காரணம் என்று நினைத்து, அவற்றைக் கடலில் போட்டுவிட்டு வர, பெலாயோ மூழ்கிக் கிடந்த தனது முற்றத்தைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது. செவ்வாய்க் கிழமையில் இருந்தே உலகம் சோகமாக இருந்தது. ஆகாயமும் கடலும் சாம்பலால் ஆன ஒற்றைப் பொருளாக இருந்தன. மார்ச் மாத