விந்தியாவின் சுதந்திரப் போர்
விந்தியாவின் சுதந்திரப் போர்
அம்பை
நான் ‘The Face Behind the Mask’ நூலுக்காக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது நாற்பதுகளில் எழுதிய பல எழுத்தாளர்களைப் பட்டியலிட்டபோது விந்தியாவின் பெயரும் பட்டியலில் இருந்தது. ஆனால் 1960இல் விந்தியா எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தார். அவருடன் கடிதத் தொடர்பு கொண்டது நினைவிருக்கிறது. என் கேள்விப்பட்டியலுக்கு அவர் தந்திருந்த பதில்கள் என்னிடம் இப்போது இல்லை. ஒரு கடிதத்துக்குப் பின் அவர் கதைகளைப் பெறும் முயற்சி வெற்றி பெறவில்லை. காவேரி, வெள்ளி மணி, சுதேசமித்திரன், பாரிஜாதம், புதுமைப் பெண், கல்கி, குமுதம், ஆனந்த விகடன் என்று பல பத்திரிகைகளில் அவர் எழுதியிருந்தாலும் அதிகமாக எழுதியது கலைமகள் பத்திரிகைய